பொறியியல் கல்லூரி கவுன்சிலிங் வரும் மாணவர்களுக்கான அழைப்பு கடிதம் மற்றும் நுழைவுத்தேர்வு அனுமதி சீட்டை, 'ஆன் - லைனில்' அனுப்ப, அண்ணா பல்கலை திட்டமிட்டுள்ளது.
பொறியியல் படிப்புக்கான விண்ணப்பம், வரும், 6ம் தேதி முதல், அண்ணா பல்கலை மற்றும் 59 மையங்களில் வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் கவுன்சிலிங் அழைப்பு கடிதம் தபால் மூலம் மாணவர்களுக்கு அனுப்பப்படுகிறது. இதேபோல், முதுகலை படிக்கும் மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வு மற்றும் கவுன்சிலிங் கடிதங்களும் தபால் மூலமே அனுப்பப்படும். ஆனால், தபாலில் அனுப்புவதில் முகவரி மாற்றம், வீட்டில் ஆள் இல்லாமல் இருப்பது போன்ற பல பிரச்னைகளால், கடிதங்கள் கிடைக்காமல், நகல் கேட்டு பல்கலைக்கு வருகின்றனர். இதனால் கூடுதல் வேலைப்பளு ஏற்படுகிறது. எனவே, இந்த ஆண்டு முதல், 'ஆன் - லைன்' முறையை படிப்படியாக கொண்டு வர, அண்ணா பல்கலை முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக, முதுகலை படிப்புக்கான, 'டான்செட்' தேர்வுக்கு, 'ஆன் - லைன்' மூலம் விண்ணப்பித்த மாணவர்களுக்கு, நுழைவுத் தேர்வுக்கான அனுமதி சீட்டை, 'ஆன் - லைனில்' அனுப்ப, பல்கலை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதேபோல், கவுன்சிலிங் வரும் மாணவர்களுக்கான அழைப்பு கடிதத்தையும், 'ஆன் - லைனில்' அனுப்ப முடிவு செய்துள்ளது. இந்த முறை படிப்படியாக, இன்ஜினியரிங் மாணவர்களுக்கும் கொண்டு வர வாய்ப்புள்ளதாக, பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன. பொறியியல் கவுன்சிலிங்கை, இந்த ஆண்டு ஜூன் இறுதி வாரம் அல்லது ஜூலை 1ம் தேதி துவங்க, அண்ணா பல்கலை முடிவு செய்துள்ளது. மேலும், கவுன்சிலிங்கை வேகமாக முடித்து, ஜூலை 31க்குள் அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடவடிக்கையை முடிக்கவும், ஆகஸ்ட் 1ம் தேதி முதல் வகுப்புகளை துவங்கவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை