'மரியாதை என்பதன் முழுமையான விளக்கமாக திகழ்ந்த ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்துவது தங்களுக்கு ஆத்ம திருப்தியளிப்பதாக' முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் படித்த அரசுப்பள்ளி மாணவர்கள் நெகிழ்ச்சியுடன் கூறினர்.
30 ஆண்டுகளுக்கு முன் பள்ளி வளாகத்தில், மாணவர்களாக வலம் வந்த வகுப்பறை மற்றும் இதர பகுதிகளை பார்வையிட்ட முன்னாள் மாணவர்கள், கடந்த கால நினைவுகளில், மூழ்கி, தங்களது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர். தொடர்ந்து, ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா நடந்தது.
ஆசிரியர்கள் பேசியதாவது
நீண்ட காலத்திற்கு பின்னர், எங்களிடம் படித்த மாணவர்கள் இத்தகைய விழா நடத்துவது பெருமையாக உள்ளது. எந்த பள்ளியில் படித்தாலும், வாழ்வில் சிறந்த இடத்தை பிடிக்க வேண்டும் என்ற லட்சியமும், கற்ற பாடத்தை முறையாக பயன்படுத்தும் அறிவு இருந்தால் அரசு பள்ளி மாணவர்களும் சாதிக்க முடியும் என்பதற்கு இம்மாணவர்கள் எடுத்துகாட்டாக உள்ளனர்.
பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கும் இம்மாணவர்களுக்கு பாடம் கற்பித்ததில் எங்களுக்கும் பெருமையாக உள்ளது. இன்றைய தலைமுறையினரும் இதுபோன்று பள்ளியில் ஆசிரியர்களையும் வீட்டில் பெற்றோரையும் மதிப்பவர்களாக இருக்க வேண்டும். கண்டிக்க வேண்டிய இடத்தில், கண்டித்தும், ஆறுதல் தேவைப்படும் நேரத்தில் அரவணைத்தும் சென்ற ஆசிரியர்களை என்றும் மறக்க முடியாது. இவ்வாறு கூறினர்.
மாணவர்கள் பேசும் போது, ''மரியாதை என்பதன் முழுமையான விளக்கத்தை நாங்கள் எங்கள் ஆசிரியர்கள் மூலம்தான் கற்றோம். இன்று பிற தேசங்களில் பணியாற்றும் அளவிற்கு உயர்ந்துள்ளதற்கு ஆசிரியர்களே முதல் காரணம். பள்ளியில், சிறப்பாக படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது போன்ற உதவிகளை செய்ய திட்டமிட்டுள்ளோம்,'' என்றனர்.
முன்னாள் மாணவர் பி.செந்தில்குமார் நன்றி கூறினார். விழாவில், 25 மாணவர்கள் பங்கேற்றனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை