விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் இளநிலை பட்டப் படிப்புகளின் எண்ணிக்கையை இரு மடங்காக உயர்த்த தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
இது குறித்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் பி.வணங்காமுடி "தினமணி'க்கு அளித்த பேட்டி:
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ஆற்றல்சார் பள்ளியில் இளநிலை சட்டப் படிப்புகள் மிகச் சிறந்த முறையில் வழங்கப்பட்டு வருகின்றன.
இப்போது பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கான பி.எல். (ஹானர்ஸ்) படிப்பும், பிளஸ் 2 முடித்தவர்களுக்கான பி.ஏ.-எல்.எல்.பி., பி.காம்.- எல்.எல்.பி. என்ற ஒருங்கிணைந்த 5 ஆண்டு சட்டப் படிப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்தப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வந்தது. கடந்த ஆண்டில் மிக அதிக அளவாக ஒரு இடத்துக்கு 10 பேர் வீதம் விண்ணப்பித்திருந்தனர். தேவை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, வசதி குறைந்த மாணவர்களும் பயன்பெறும் வகையில், படிப்பு இடங்களை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு ஆட்சி மன்றக் குழுவும் அனுமதி அளித்துவிட்டது.
இதன்மூலம், பி.எல். (ஹானர்ஸ்) படிப்பு இடங்கள் 80-லிருந்து 120-ஆகவும், பி.ஏ.- எல்.எல்.பி. படிப்பில் இருந்த 160 இடங்கள் 180-ஆகவும், பி.காம்.- எல்.எல்.பி. படிப்பில் இருந்த 80 இடங்கள் 120-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளன.
நடைபெற உள்ள 2015-16-ஆம் கல்வியாண்டு கலந்தாய்வில், இந்தக் கூடுதல் இடங்களிலும் மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.
2 புதிய படிப்புகள்: மேலும், இந்தியாவிலேயே முதன்முறையாக பி.சி.ஏ.- எல்.எல்.பி., பி.பி.ஏ.- எல்.எல்.பி. என்ற இரண்டு புதிய 5 ஆண்டு ஒருங்கிணைந்த பட்டப் படிப்புகள், ஆற்றல்சார் பள்ளியில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
தலா 120 இடங்களைக் கொண்ட இந்தப் படிப்புகளிலும், 2015-16-ஆம் கல்வியாண்டுக் கலந்தாய்வில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்றார் அவர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை