ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., போன்ற உயர் பதவிகளுக்கான போட்டித் தேர்வு, மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு நடத்தப்பட்ட, சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வு முடிவுகள், நேற்று முன்தினம் வெளியாயின.
இதில், வெற்றி பெற்றுள்ள தேர்வர்களுக்கு, விரைவில் நேர்முகத் தேர்வு நடக்கவுள்ளது. இந்நிலையில், முதன்மை தேர்வில் வெற்றி பெற்றுள்ள தேர்வர்கள், தாங்கள் பணியாற்ற விரும்பும் துறை குறித்த விவரங்களை, ஆன் - லைனில் புதிதாக பதிவு செய்ய வேண்டும் என, யு.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, யு.பி.எஸ்.சி., அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த ஆண்டு நடந்த சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வுகளில் வெற்றி பெற்றோர் விவரங்கள், இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள மாணவர்கள், தாங்கள் பணியாற்ற விரும்பும் துறை குறித்த விவரங்களை, இணையத்தில் மீண்டும் புதிதாக பதிவு செய்ய வேண்டும். அவர்களுக்கு விரைவில், நேர்முகத் தேர்வு நடத்தப்படும். அதில் வெற்றி பெறும் தேர்வர்கள், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்., அதிகாரிகளாக நியமிக்கப்படுவர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை