அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டுக்கான பிளஸ் 2 புத்தகங்கள் விநியோகம் தொடங்கியுள்ளது. இந்த வார இறுதிக்குள் மாணவர்களுக்கான புத்தகங்கள் முழுமையாக விநியோகிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதன்படி, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான பிளஸ் 2 புத்தகங்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்தப் பள்ளிகளில் பிளஸ் 1 முடித்த மாணவர்களுக்கு பிளஸ் 2 புத்தக விநியோகம் தொடங்கியுள்ளது.
விழுப்புரம், தஞ்சாவூர், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும்பாலான மாணவர்களுக்கு பிளஸ் 2 புத்தகங்கள் திங்கள்கிழமை விநியோகிக்கப்பட்டன. இந்த வார இறுதிக்குள் அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்கள் விநியோகிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தனியார் பள்ளி மாணவர்களுக்கு....
தனியார் பள்ளி மாணவர்களுக்கான பிளஸ் 2 புத்தகங்கள் தமிழ்நாட்டுப் பாடநூல், கல்வியியல் பணிகள் கழகத்தின் வட்டார அலுவலகங்கள் மூலம் பள்ளிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த அலுவலகங்களில் பணத்தைச் செலுத்தி தனியார் பள்ளிகள் புத்தகங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
சில்லறை விற்பனை எப்போது?
அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கான புத்தக விநியோகம் நிறைவடைந்த பிறகே பிளஸ் 2 புத்தகங்களின் சில்லறை விற்பனை தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒன்பதாம் வகுப்பு தேர்வுகள் நிறைவடைந்த பிறகு அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பத்தாம் வகுப்புக்கான புத்தக விநியோகம் தொடங்கும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை