Ad Code

Responsive Advertisement

பிளஸ்-2 தேர்வில் கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை : அரசு தேர்வு இயக்குனர் கு.தேவராஜன் பேட்டி

பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 5-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி முடிந்தது.இந்த தேர்வில் கணிதத்தேர்வில் ஒருகேள்வி குழப்பமான முறையில் கேட்கப்பட்டிருந்தது. அந்தக்கேள்வியில் கேட்பப்பட்டது மைனசா, பிளஸா என்று தெரியாமல் மாணவர்கள் விழித்தனர்.

அதுபோல வேதியியல் தேர்வில் 10-வது கேள்வியும் சரியாக கேட்கப்படவில்லை. 22-வது கேள்வியில் கொடுக்கப்பட்ட 4 விடைகளும் சரி இல்லை. மேலும் பொருளாதார தேர்வில் 78-வது கேள்வி 20 மதிப்பெண்ணுக்கு உரியது.அந்த கேள்வி பற்றியும் பிரச்சினை கிளப்பப்பட்டது. எனவே பிளஸ்-2 கணிததேர்வு, வேதியியல் தேர்வு, பொருளாதார தேர்வு உள்பட அனைத்து தேர்வுகளில் எந்த தேர்வுக்கு? எத்தனை கருணை மதிப்பெண் வழங்க முடிவு செய்துள்ளீர்கள்? என்று கேட்டதற்கு அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் பதில் அளிக்கையில் “ஒவ்வொரு பாடத்திற்குரிய தேர்வுக்கும் தனித்தனியாக சரியான விடை அளிப்பதற்கான கமிட்டி போடப்பட்டுள்ளது. அந்த கமிட்டி இன்னும் அறிக்கை தரவில்லை. அதனால் கருணை மதிப்பெண் போடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை” என்றார். 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement