பிளஸ் 2 விலங்கியல் பாடத்தில் அனைத்து பிரிவுகளிலும் கடினமாக கேள்விகள் கேட்கப்பட்டதால் உயிரியல் தேர்வில் 200 மதிப்பெண் எடுப்பது சிரமம்' என மாணவர்கள் தெரிவித்தனர். உயிரியல் தேர்வு குறித்து அவர்கள் கூறியதாவது:
எம்.பவித்ரா (எஸ்.எஸ்.அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ராஜபாளையம்): விலங்கியல் பகுதி கஷ்டமாகவும், தாவரவியல் பகுதி எளிதாகவும் இருந்தது. எதிர்பாராத கேள்விகள் விலங்கியலில் இருந்தன. தாவரவியலில் முதல்பாடத்தை நன்றாக படித்திருந்தால் அதிகமதிப்பெண் பெறலாம். அதில் இருந்து மூன்று, ஐந்து மற்றும் 10 மதிப்பெண் வினாக்கள் வந்திருந்தன. பாடத்தின் உள்ளே இருந்து நுணுக்கமாக கேள்விகள் எடுக்கப்பட்டு இருந்தன.
வி.மகாராணி (அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருத்தங்கல்): தாவரவியல் கேள்விகள் மிக எளிதாக இருந்தன. விலங்கியல் பாடத்தில் மூன்று மதிப்பெண் உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளிலும் கேள்விகள் கடினமாக இருந்தன. முந்தைய ஆண்டு கேட்கப்பட்ட கேள்விகள் எதுவும் திரும்ப கேட்கப்படவில்லை. புத்தகத்தில் இருந்து நேரடியாக கேள்விகள் கேட்கப்படாததால் பதில் அளிப்பதில் சிரமம் இருந்தது.
எம்.சாரதா (ஆசிரியை, சத்திரிய மகளிர் மேல்நிலைப்பள்ளி, விருதுநகர்): விலங்கியல் புத்தகத்தை முழுமையாக படித்திருந்தாலும் எளிதில் விடையளிக்க முடியாத அளவு அனைத்து பிரிவு கேள்விகளும் கடினமாக இருந்தன. 'வீக்' மாணவர்கள் தேர்ச்சி பெற சில குறிப்பிட்ட பாடங்களை நன்கு படிக்க வலியுறுத்தினோம். ஆனால் வழக்கமாக அப்பாடங்களில் இருந்து கேட்கப்படும் கேள்விகள் இந்த ஆண்டு இல்லை. தேர்வு முடிந்தபின் ஒரு மதிப்பெண் வினாக்களுக்கான விடையை நீண்ட நேரம் தேடிய பின்னரே கண்டுபிடிக்க முடிந்தது. கட்டாயமாக விடையளிக்க வேண்டிய வினாக்களும் கடினம் தான். இதற்கு சற்று ஆறுதல் தரும் விதமாக தாவரவியலில் அனைத்துப்பிரிவு வினாக்களும் ஏற்கனவே கேட்கப்பட்டவையாக, எளிதாக இருந்தன. விலங்கியல் வினாக்கள் கடுமை காரணமாக உயிரியலில் 200க்கு 200 மதிப்பெண் எடுப்பது சவால்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை