கற்றல் திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிறப்பு வழி கற்றல் முறை அவசியம் என்று இந்திய குழந்தைகள் நல மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் டி.முத்துசாமி தெரிவித்தார்.
பள்ளியில் பயிலும் மாணவர்களில் சுமார் 10 சதவீதம் பேர் வரை கற்றல் திறன் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கற்றல் திறன் குறைபாடு உள்ள குழந்தைகள் எழுவது, படிப்பது, உச்சரிப்பதற்கு சிரமப்படுகின்றனர். எனவே, அவர்களுக்கு சிறப்பு வழி கற்றல் என்பது அவசியமாகிறது.
இந்தக் குறைபாடு உள்ள குழந்தைகளை 3 முதல் 4 வயதுக்குள்ளேயே கண்டறியலாம். கற்றல் திறன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய கல்விச் சோதனைகள் செய்து, அவர்களின் குறைபாட்டின் தீவிரத்தை கண்டறிய வேண்டும்.
அதன் மூலம் அவர்களுக்குத் தகுந்தவாறு கல்வி அளித்து திறமையானவர்களாக மாற்ற முடியும்.
இதுகுறித்து குழந்தைகள் நல மருத்துவர்களிடமும், மக்களிடமும் போதிய விழிப்புணர்வு இல்லை என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை