அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் பள்ளி செயல்பாடுகளை படம் பிடித்து முகநுாலில் பகிர செய்கீரிர்களா? அப்படி எனில் ஆசிரியர் நண்பர்களே உஷார்...
முகநுாலில் பள்ளிகளில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளையும், மற்ற புகைப்படங்களையும் அப்லோட் செய்வதற்கு கல்வி துறை தடை செய்ய உள்ளது.
அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை மார்பிங் செய்து அம்மாணவிகள் மினி பீர் குடிப்பது போன்று புகைப்படங்களை உருவாக்கி அதனை முகநுாலில் சிலர் பரவ விட்டுள்ளனர்
இதனை கல்விதுறையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
விரைவில் இந்த நிகழ்வுக்கு காரணமாணவர்களை தண்டிக்க அரசு தயாராகி வருகிறது.
மேலும் அரசு பள்ளி மாணவ , மாணவிகள் சார்ந்த விவரங்களை முகநுாலிலோ அல்லது வேறு முறையிலோ பகிரப்படுவது சட்டபடி குற்றம் எனவும் மீறுவோரை பணி நீக்கம் செய்யவும் அரசு தயாராகி வருகிறது
இவ்வாறு பகிரப்படும் புகைப்படங்களை வேறு முறையில் பயன்படுத்த அதிகம் வாய்ப்பு உள்ளதாகவும் அறியப்பட்டுள்ளது.
மேற்கண்ட அந்த பள்ளி மாணவிகளின் புகைப்படத்தை நம் முகநுால் அன்பர்கள் யாராவது எங்கிருந்தாவது பார்த்து உங்களுக்குள் பகிர்ந்து கொண்டிருந்தாலோ அல்லது ஷேர் செய்து இருந்தாலோ உடனடியாக அகற்றவும்.
இனி கவனத்துடன் செயலாற்ற அனைத்து ஆசிரியர்களையும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை