'கல்வி நிறுவனங்களில், சூரிய மின்சக்தி அமைப்புகளை நிறுவ ஆலோசனை தேவைப்பட்டால், மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை ஆலோசகரை அணுக வேண்டும்' என, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டு உள்ளது.
பல்கலைகள், அவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகள், தனியார் கல்வி நிறுவனங்களில், சூரிய மின்சக்தி உற்பத்தி அமைப்புகளை நிறுவ வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. இதையடுத்து, கடந்த டிசம்பரில், யு.ஜி.சி., சார்பில், பல்கலைகளுக்கு அறிவுறுத்தல் கடிதம் அனுப்பப்பட்டது. இந்நிலையில், மீண்டும் ஒரு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
இக்கடித விவரம்:
கல்வி நிறுவனங்களில், சூரிய மின்சக்தி அமைப்பு களை நிறுவுவதற்கான உதவிகளை மத்திய அரசு செய்து வருகிறது. கட்டடங்களின் மேற்கூரைகள் மற்றும் காலியிடங்களில், இந்த அமைப்பை நிறுவ விரும்பும் கல்வி நிறுவனங்கள், மத்திய நவீன மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின், ஆலோசகர் என்.பி.சிங்கை, 011-2436 2288 என்ற தொலைபேசி எண் அல்லது npsinghmnes@nic.in என்ற இ-மெயில் முகவரியில் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். இந்த தகவலை, அனைத்து அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளுக்கும் பல்கலைகள் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை