டிஜிட்டல் முறையில் மாற்றுவதற்காக குருவராஜபேட்டை மாணிக்கவாசகர் மடாலயத்தில் இருந்த 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 20 அரிய தமிழ் நூல்களை உலகத் தமிழ் ஆராய்ச்சி மையத்தினர் வியாழக்கிழமை சென்னைக்கு கொண்டு சென்றனர்.
வேலூர் மாவட்டம், அரக்கோணத்தை அடுத்த குருவராஜபேட்டையில் மாணிக்கவாசகர் மடாலயம் உள்ளது. திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் நிர்வாகத்தின் பராமரிப்பில் உள்ள இந்த மடாலயத்தில் 19ம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய தமிழ் நூல்கள் உள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை மூலம் தமிழ் பண்பாட்டு ஆராய்ச்சி துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தமிழ் ஆராய்ச்சி மைய இயக்குநர் விஜயராகவன் குருவராஜபேட்டையில் உள்ள மாணிக்க வாசகர் மடாலாயத்துக்கு வியாழக்கிழமை நேரில் வந்தார்.
இங்குள்ள பழங்காலப் புத்தகங்களை பார்வையிட்ட இயக்குநர் விஜயராகவன், தமிழக அரசின் சுவடிகள் பாதுகாப்பு மையப் பொறுப்பாளரும், பேராசிரியருமான அ.சதீஷ் ஆகியோர் டிஜிட்டல் முறையில் மாற்றுவதற்காக சிதிலமடைந்த நிலையில் இருந்த 20 புத்தகங்களைத் தேர்வு செய்தனர்.
இதில் உ.வே.சாமிநாத அய்யரின் ஆசிரியர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை பதிப்பித்த திருவானைக்கா புராணம், ஆறுமுக நாவலர் பதிப்பித்த கந்தபுராணம் ஸ்ரீவை தாமோதரப் பிள்ளை பதிப்பித்த சூலாமணி, தஞ்சை வளவன் கோவை, கல்லாடம் உள்ளிட்ட 19-ஆம் நூற்றாண்டு நூல்கள் சென்னைக்கு எடுத்துச் செல்லப்பட்டன.
மேலும், குருவராஜபேட்டையில் உள்ள மங்கலங்கிழார் நூல் நிலையத்தில் இருந்து மாணிக்கவாசகர் மடாலயத்துக்கு அளிக்கப்பட்ட 1930-இல் வெளிவந்த கலாநிலையம் இதழ்கள் 20க்கும் மேற்பட்டவையும் டிஜிட்டல் முறை மாற்றத்துக்காக சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டன. மடாலயப் பொறுப்பாளர் பாலசுப்பிரமணியன் இந்தப் புத்தகங்களை உலகத் தமிழ் ஆராய்ச்சி மைய இயக்குநர் விஜயராகவனிடம் ஒப்படைத்தார்.
இது குறித்து சுவடிகள் பாதுகாப்பு மையப் பொறுப்பாளர் அ.சதீஷ் தெரிவிக்கையில், "இந்த அரிய நூல்களை இதுவரை பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்தது பெரிய விஷயம்.
இந்த அரிய நூல்கள் பதிப்பித்த முறை மாறாமல் எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ள இவற்றை டிஜிட்டல் முறையில் மாற்றுவது அவசியம்' என்றார் அ.சதீஷ்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை