கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில், 21 லட்சம் இடங்கள் உள்ள நிலையில், அதில், 29 சதவீத இடங்களே நிரப்பப்படுகின்றன. கண்காணிப்பு இல்லாதது; இதுபோன்ற வசதி இருக்கிறது என்பது தெரியாதது; தனியார் பள்ளிகளின் பணத்தாசை போன்றவற்றால், இந்த உயரிய திட்டம் பாழாகிறது. ஏராளமான ஏழை மாணவர்களுக்கு தரமான கல்வியும் கிடைக்காமல் போகிறது.
இதன் முக்கிய அம்சங்களாவன:
* கடந்த, 2013 - 14ம் கல்வியாண்டு இந்த ஆய்வுக்காக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
* 21 லட்சம் இடங்கள் ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகள் ஒதுக்க வேண்டிய நிலையில், 6 லட்சம் இடங்கள் தான் ஏழைகளுக்கு கிடைத்துள்ளது.
* ஒன்பது மாநிலங்களில், 20 சதவீதத்திற்கும் குறைவான இடங்கள் தான் ஒதுக்கப்பட்டுள்ளன.
* ஒன்றாம் வகுப்பில், இரண்டு லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டிய நிலையில், 45 ஆயிரம் மாணவர்களுக்குத் தான் இடம் அளிக்கப்பட்டுள்ளது.
* பெருநகரங்களிலும், இந்நிலை காணப்படுகிறது. டில்லியில் நிலைமை பரவாயில்லை.
* கல்விக் கட்டணம் இலவசம் என்ற விவரம் பெரும்பான்மையான பெற்றோருக்கு தெரியவில்லை. தனியார் பள்ளிகளில், ஏழை மாணவர்களுக்கு என்னென்ன சலுகைகள் உள்ளன என்பது குறித்து, பள்ளி நிர்வாகங்கள் வெளிப்படையாக கூறுவதில்லை.
தமிழகத்தில் 11.25 சதவீதம்: கடந்த, 2013 - 14ம் கல்வியாண்டில், தனியார் பள்ளிகளில் ஒதுக்கப்பட்ட இடங்கள்: டில்லியில், 92 சதவீதம்; மத்திய பிரதேசம், 88 சதவீதம்; ராஜஸ்தான், 69 சதவீதம்; ஆந்திரா, 0.2 சதவீதம்; ஒடிசா, 1.85 சதவீதம்; உத்தர பிரதேசம், 3.62 சதவீதம்; தமிழகம், 11.25 சதவீதம்; மகாராஷ்டிரா, 19.35 சதவீதம்.
1.6 கோடி ஏழை மாணவர் பயன் பெற்றிருப்பர்:
'சுயநிதி தனியார் பள்ளிகளில், 25 சதவீத இடங்களை ஏழை மாணவர்களுக்கு கட்டாயம் ஒதுக்க வேண்டும்' என, சட்டம் இயற்றிய பிறகும், அதை செயல்படுத்தாதது மிகப் பெரிய குற்றம் எனவும், அந்த குற்றத்திலிருந்து தப்பிக்க, சில பள்ளிகள் முறைகேடான வழிகளை பின்பற்றியுள்ளன எனவும், ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும், கல்வித் திட்டமிடல் மற்றும் நிர்வாகத்திற்கான தேசிய பல்கலைக்கழக பேராசிரியர் நளினி ஜுனிஜா கூறும் போது, ''அரசின் இந்த அருமையான சட்டம், ஐந்தாண்டுகள் ஆன பிறகும் முழுமையாக பின்பற்றப்படவில்லை,'' என்றார்.
ஆமதாபாத் ஐ.ஐ.எம்., பேராசிரியர் அங்குர் சரின், ''தேசிய அளவில், 6 லட்சம் இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்ட நிலையில், பா.ஜ., ஆளும், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில், இந்தச் சட்டம் சிறப்பான முறையில் பின்பற்றப்பட்டுள்ளது. அவ்விரு மாநிலங்களில் மட்டும், 3 லட்சம் இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன,'' என்றார். ''இந்தச் சட்டம் அமலுக்கு வந்து, ஐந்தாண்டுகள் ஆன பிறகும், சரிவர பின்பற்றப்படாததற்கு காரணம், இப்படியொரு சட்டம் இருக்கிறது என்பது பலருக்கும் தெரியாதது தான்; தெரிந்தவர்களும் அதை பின்பற்றாதது தான். சரியான முறையில் பின்பற்றப்பட்டிருந்தால், ஐந்தாண்டுகளில், 1.6 கோடி மாணவர்கள் பயன் பெற்றிருப்பர்,'' என, 'சென்ட்ரல் ஸ்கோயர் பவுண்டேஷன்' என்ற அமைப்பைச் சேர்ந்த, ஆஷிஸ் தவான் கூறுகிறார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை