பிளஸ் 2 தேர்வில், மொழிப்பாட விடைத்தாள் திருத்தும் பணி பெரும்பாலும் முடிந்துவிட்டது. கணினி அறிவியல், புவியியல் மற்றும் வணிகவியலுக்கு, விடைத்தாள் திருத்தும் பணி துவங்குகிறது. பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் முடிய, முடிய, விடைத்தாள் திருத்தும் பணியும் நடந்து வருகின்றன. முதற்கட்ட விடைத்தாள் திருத்தும் பணி, கடந்த 16, 17ம் தேதிகளில் துவங்கியது.
இதில், மொழிப் பாடங்களுக்கு பல மையங்களில் திருத்தும் பணி முடிந்து விட்டது. முக்கியப் பாடங்களுக்கு விடைத்தாள் திருத்தும் முதற்கட்ட பணி, நேற்று முன்தினம் துவங்கியது. இன்று முதல், கணினி அறிவியல், வணிகவியல் மற்றும் புவியியல் தேர்வுக்கான விடைத்தாள்கள் திருத்தப்படுகின்றன.
இந்தப் பணிகளுக்கு வரும் ஆசிரியர்களின் பட்டியலை, பள்ளிகளுக்கு மாவட்டக் கல்வி அதிகாரிகள் அனுப்பி வருகின்றனர். ஊதியம் குறைவாக இருப்பதாகவும், தனியார் பள்ளிகளில், பிளஸ் 2வுக்கு பாடம் எடுத்து வரும் நிலையிலும், பல தனியார் பள்ளி ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்த முன்வரவில்லை.
விடைத்தாள் திருத்த வராதவர்கள் மீது, கல்வித்துறை ரீதியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்; மற்ற மாவட்டங்களுக்கு விடைத்தாள் திருத்தும் மைய உதவியாளராக செல்ல வேண்டிய நிலை வரும் என்று, தேர்வுத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை