"பத்தாம் வகுப்பு தமிழ் முதல் தாள் தேர்வு எளிதாக இருந்ததால் அதிக மதிப்பெண் பெறுவது உறுதி" என மாணவர்கள் உற்சாகமாக தெரிவித்தனர்.
மதுரையில் இத்தேர்வு எழுதிய மாணவர்கள் கூறியதாவது:ஜெயப்பிரியா, கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் பள்ளி, மதுரை: வினாக்கள் எளிமையாக இருந்தது. மூன்று திருப்புதல் தேர்வுகளில் இடம் பெற்ற வினாக்களே அதிகம் கேட்கப்பட்டன. ஆசிரியர்கள் குறிப்பிட்ட, எதிர்பார்த்த வினாக்கள் இடம் பெற்றன.
அபிஷேக், வண்டியூர் அரசு உயர்நிலைப் பள்ளி, மதுரை: ஒரு மதிப்பெண் மற்றும் இரண்டு மதிப்பெண் வினாக்கள் முழுவதும் 'புக்பேக்'கில் இருந்தே கேட்கப்பட்டன. செய்யுள் மனப்பாட பகுதியில் எதிர்பார்த்த திருக்குறள், சிலப்பதிகாரம் பாடல்கள் இடம் பெற்றன. 'சாரா கிரேஸ், செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி, மதுரை இரண்டு மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் கடந்த மூன்று தேர்வுகளில் கேட்கப்பட்டவை. எட்டு மதிப்பெண் நெடு வினா பகுதியில் 'ஒழுக்கம் உடமை' என்ற எதிர்பார்த்த வினாவே கேட்கப்பட்டது.
உரைநடை பகுதியில் எளிமையான திரைப்பட கலை பாடத்தில் இருந்தே வினா இடம் பெற்றன. அதிக மதிப்பெண் பெறுவது எளிது.தமிழாசிரியை சுகுமாரி, அரசு உயர்நிலைப் பள்ளி, திருப்பாலை: ஒரு மதிப்பெண், பொருத்துக, விடைக் கேற்ற வினா தேர்வு போன்ற பகுதிகள் எளிமையாக இருந்தன. இயல் 5 மற்றும் 10ல் இருந்து நெடுவினா கேட்கப்பட்டன. இதில் மட்டும் சுமாராக படிக்கும் மாணவர்கள் சற்று சிரமப்படுவர். திருப்புதல் தேர்வுகளில் கேட்ட வினாக்களே அதிகம் இடம் பெற்றன. எளிதில் அதிக மதிப்பெண் பெறலாம்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை