முழு ஆண்டுத்தேர்வுகள் முடிந்து, கோடை விடுமுறைக்கு பின், பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே, பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச பஸ் பாஸ் வழங்குவதற்காக, அரசு பள்ளிகளில் விண்ணப்பம் வழங்கி, பூர்த்தி செய்து பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியரிடம் பள்ளி ஆசிரியர்கள், 2015 - 16ம் ஆண்டிற்கான இலவச பஸ் பாஸ் வழங்குவதற்கான விண்ணப்பங்களை வழங்கி, பூர்த்தி செய்து பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து, கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: வழக்கமாக கோடை விடுமுறைக்கு பின், பள்ளிகள் திறக்கும்போது, கடந்த ஆண்டுக்கான இலவச பஸ் பாஸ் இல்லாத போதிலும், பள்ளியின் சீருடையில் வரும் மாணவ, மாணவியரை அழைத்துச் செல்லுமாறு போக்குவரத்து கழகத்திற்கு அறிவுறுத்தப்படும். அடுத்த இரு மாதங்களில், அவர்களுக்கு பஸ் பாஸ் வழங்கப்படும். ஆனால், பள்ளி கல்வித் துறை உத்தரவையடுத்து, வரும் ஆண்டுக்கு, பிளஸ் 2, 10ம் வகுப்பு மாணவர்களை தவிர்த்து, இதர வகுப்பில் படிக்கும் மாணவ, மாணவியரிடம் பஸ் பாசுக்கான விண்ணப்பம், இப்போதே வழங்கி பூர்த்தி செய்து பெறப்படும். 2015 - 16ம் ஆண்டுக்கான இலவச பஸ் பாஸ் தயார் செய்து, பள்ளி திறக்கும் முதல் நாள் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும். பள்ளி மாறிச்சென்றவர்கள், புதிதாக பள்ளிக்கு வந்தவர்கள் விவரங்களை வழங்கி, பாஸ்களை ரத்து செய்யவும், பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை