சிறந்த படங்களைக் கொடுக்க வேண்டும் என்பதற்கு இந்த தேசிய விருது ஆகச்சிறந்த ஊக்குவிப்பாக இருக்கிறது என்று தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார் இயக்குநர் பிரம்மா. இவர் இயக்கிய 'குற்றம் கடிதல்' திரைப்படம் சிறந்த தமிழ் திரைப்படத்துக்கான தேசிய விருதை வென்றுள்ளது.
62-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்பட்டது.
இதில், பள்ளிக் கல்வித் துறையின் சீர்திருத்தம், ஆசிரியர் - மாணாக்கர் உறவு, தவறு செய்யும் மாணவர்களைத் திருத்துவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றில் பல்வேறு விவாதங்களைத் தூண்டக் கூடிய படமாக 'குற்றம் கடிதல்' உள்ளதால் தேசிய விருதுக்கு தேர்வானது.
விருது பெற்ற இயக்குநர் பிரம்மாவிடம் வாழ்த்துகள் தெரிவித்தோம்.
''இந்த விருதுக்கு இனிமேல் தான் என்னை தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். மேலும் சிறந்த படங்களைக் கொடுக்க வேண்டும் என்பதற்கு இந்த விருது எனக்கு ஊக்குவிப்பாக இருக்கிறது.
இந்த தேசிய விருதை என்னுடைய படக்குழு மற்றும் முதல் வாய்ப்புக்காக காத்திருக்கும் எல்லா இயக்குநர்களுக்கும் இந்த விருதை அர்ப்பணிக்கிறேன்'' என்கிறார் பிரம்மா...
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை