நாகை மாவட்டம், சீர்காழி அருகே அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்ட 6 மாணவ, மாணவிகள் கல்வித் துறையின் நடவடிக்கையால் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ் இரண்டாம் தாள் தேர்வை எழுதினர்.
ஆனால், 100 சதவீத தேர்ச்சி காட்ட சுமாராகப் படிக்கும் இந்த 6 மாணவ, மாணவிகளை வருகைப் பதிவை காரணம் காட்டி தேர்வு எழுத பள்ளி நிர்வாகம் அனுமதிக்கவில்லை என பெற்றோர் குற்றம்சாட்டினர். இதையடுத்து, துறை ரீதியான விசாரணைக்குப் பிறகு பள்ளித் தலைமை ஆசிரியை பட்டுஷீலா அற்புதராணி, வகுப்பு ஆசிரியர் ஆனந்த், செய்முறை ஆசிரியர் பரமானந்தன் ஆகியோர் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட 6 மாணவ, மாணவிகளுக்கும் மாவட்ட கல்வித் துறை நடவடிக்கையால் நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டு மீண்டும் தேர்வு எழுத அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி, இந்த 6 பேரும் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ் இரண்டாம் தாள் தேர்வை ஆர்வமாக எழுதினர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை