Ad Code

Responsive Advertisement

ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கு ரூ.30 கோடியில் நிர்வாக கட்டடம்

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு, 30.40 கோடி ரூபாய் செலவில், கட்டடம் கட்டும் பணியை, பொதுப்பணித்துறை துவக்கியுள்ளது.இந்த பல்கலைக்கழகம், 2008ல், துவங்கப்பட்டது.
இதில், 600க்கும் மேற்பட்ட கல்வியியல் கல்லுாரிகள் இணைக்கப்பட்டுள்ளன.காஞ்சிபுரம் மாவட்டம், காரப்பாக்கத்தில், பல்கலைக்கழக கட்டடம் கட்ட, அரசு முடிவு செய்தது. தற்போது அப்பணியை, பொதுப்பணித்துறையினர் துவக்கியுள்ளனர்.


இதுகுறித்து, பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:இங்கு, பல்கலைக்கழகத்தின் நிர்வாக கட்டடம், வகுப்பறைகள், மாணவர், மாணவியர் விடுதி கட்டடங்கள் கட்டப்படும். பொதுவான உணவருந்தும் கூடமும் அமைய உள்ளது. நவீன வசதிகளுடன், இந்த கட்டடம் அமையும். கட்டட பணிக்காக, அரசு, 30.40 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. கட்டுமானப்பணி விரைவில் துவங்கும். ஒப்பந்ததாரர் தேர்வு ஏற்கனவே நடத்தப்பட்டு விட்டது.இவ்வாறு, அவர் கூறினார்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement