கன்னியாகுமரி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வறையில் மாணவிக்கு தொல்லை அளித்ததாக எழுந்த புகாரையடுத்து, தேர்வு மைய ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் மாவட்ட ஆட்சியர், முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் அளித்தனர். இந்த புகார் மனு மீது விசாரணை நடத்தி திங்கள்கிழமைக்குள் (மார்ச் 9) அறிக்கை தருமாறு முதன்மை கல்வி அலுவலருக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
இதற்கிடையே, புகார் தெரிவிக்கப்பட்ட ஆசிரியர் பணியாற்றிய அரசு உதவி பெறும் பள்ளி நிர்வாகம் அவரை சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்துள்ளது.
இதுகுறித்து, முதன்மை கல்வி அலுவலர் ஏ.எஸ்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
புகார் குறித்து தக்கலை கல்வி மாவட்ட அதிகாரி ஜேக்கப் அருள்மாணிக்கம் விசாரணை நடத்தி வருகிறார். தற்போது புகாருக்குள்ளான ஆசிரியரை பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.
விசாரணை அறிக்கை கிடைத்ததும் அவர் மீது கல்வித் துறை சார்பில் துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டியவை குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை