திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேர்வறையில் பறிமுதல் செய்த கத்தி, செல்லிடப்பேசியை திருப்பித் தருமாறு கேட்டு, ஆசிரியையை மிரட்டிய பிளஸ் 1 மாணவர்கள் இருவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
வள்ளியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 23-ஆம் தேதி பிளஸ் 1 தேர்வு நடைபெற்றது. அந்தப் பள்ளியில் கணினி அறிவியல் பயிலும் இரு மாணவர்கள் தேர்வு எழுதிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் இருந்த மேஜையில் கத்தியும், செல்லிடப்பேசியும் இருந்தனவாம். இதைக் கண்டறிந்த தேர்வறைக் கண்காணிப்பாளரான ஆசிரியை அவற்றைக் கைப்பற்றி, பள்ளித் தலைமை ஆசிரியை மரிய கொரட்டியிடம் ஒப்படைத்தார்.
இந்நிலையில், இந்த இரு மாணவர்களும் புதன்கிழமை அந்த ஆசிரியை வீட்டுக்குச் சென்றுள்ளனர். அப்போது வீட்டில் ஆசிரியை இல்லாததால், அவரது கணவரிடம் தங்களது கத்தி, செல்லிடப்பேசியைக் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக, வள்ளியூர் காவல் நிலையத்தில் ஆசிரியை வியாழக்கிழமை புகார் அளித்தார். அதன்பேரில், உதவி ஆய்வாளர் உமா தமிழ்ச்செல்வி வழக்குப் பதிந்து, அந்த இரு மாணவர்களையும் கைது செய்தார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை