Ad Code

Responsive Advertisement

கோடை விடுமுறையில் பிளஸ் 2 வகுப்புகள்

பிளஸ் 1 வகுப்பில், தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, கோடை விடுமுறையில், பிளஸ் 2 பாடங்களைத் துவங்க, அரசு பள்ளிகள் முடிவு செய்துள்ளன.
இதுகுறித்து, கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:அரசுப் பள்ளிகளில், கோடை விடுமுறை முடிந்த பின், ஜூன் முதல் பாடங்களை துவங்குகிறோம். ஆனால், தனியார் பள்ளிகள், ஜனவரி முதல், பிளஸ் 1 மாணவர்களுக்கு, பிளஸ் 2 பாடங்களை நடத்துகின்றன. எனவே, இந்த முறை மே முதல் வாரத்தில் இருந்து, பிளஸ் 1 தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, பிளஸ் 2 பாடங்களை துவங்க திட்டமிட்டு உள்ளோம்.
பல பள்ளிகளில் ஆசிரியர்கள் பலர், கோடை விடுமுறையில் பாடம் எடுக்க, தாங்களே முன்வந்துள்ளனர். இதன்மூலம் அரசுப் பள்ளி மாணவர், அதிக கட்டணம் செலுத்தி கோடையில், தனியார் 'டியூஷன்' செல்ல வேண்டிய தேவை இல்லை.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement