பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் திங்கள்கிழமை (மார்ச் 16) தொடங்கப்பட உள்ளன. இதற்காக தமிழகம் முழுவதும் 66 விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் முதன்மைத் தேர்வர்கள் விடைத்தாள்களை திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் திருத்துகின்றனர்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 5-ஆம் தேதி தொடங்கியது. இத் தேர்வை 2,377 மையங்களில் தனித்தேர்வர்கள் 42 ஆயிரம் பேர் உள்பட மொத்தம் 8.86 லட்சம் பேர் எழுதி வருகின்றனர்.
மொழிப்பாடங்கள், ஆங்கிலப் பாடத்துக்கான தேர்வுகள் நிறைவடைந்த நிலையில், ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் அமைக்கப்பட்டுள்ள விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு விடைத்தாள்கள் கொண்டுசெல்லப்பட்டுள்ளன.
பிளஸ் 2 தேர்வு மார்ச் 31-ஆம் தேதியோடு முடிவடைகிறது. ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, இந்த மையங்களிலிருந்து கணினி மூலம் மதிப்பெண்கள் பெறப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மொழிப்பாடங்கள், முக்கியப் பாடங்கள் உள்பட அனைத்துப் பாட விடைத்தாள்களிலும் ரகசிய பார்கோடு எண் மட்டுமே இடம்பெற்றிருக்கும். இதன்மூலம், சம்பந்தப்பட்ட விடைத்தாள் எந்த மாணவருடையது என்பதை விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களே கூட அறிந்துகொள்ள முடியாது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை