Ad Code

Responsive Advertisement

மகனை கண்டித்த பள்ளி ஆசிரியரை தாக்கியவர் கைது

திருப்போரூரை அடுத்த நெல்லிகுப்பம் தனியார் பள்ளியின் மாணவரைக் கணடித்த உடல்கல்வி ஆசிரியரை தாக்கிய மாணவனின் தந்தையை போலீஸார் கைது செய்தனர்.

இதனையடுத்து சம்பவத்தைக் கண்டித்து காலவரையின்றி மூடப்பட்ட பள்ளி வியாழக்கிழமை வழக்கம் போல் இயங்கியது. திருப்போரூரை அடுத்த நெல்லிகுப்பம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிபவர் ராஜ்குமார். கடந்த 19ந் தேதி பள்ளி வளாகத்தில் மோட்டார்சைக்கிள் ஓட்டிவந்த 9ம் வகுப்பு படிக்கும் மாணவன் அரவிந்த்தை கண்டித்துள்ளார். இதனையடுத்து மாணவனின் தந்தை ரமேஷ் மற்றும் அவரது உறவினர்கள் பள்ளி வளாக்தில் ராஜ்குமாரை தாக்கியுள்ளனர்.

காயம் அடைந்த அவருக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை  அளிக்கப்பட்டது. இந்நிலையில் தனியார் பள்ளியின் நிர்வாகிகள், ஆசிரியர்கள் தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யும்படி திருப்போரூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். மேலும் தனியார்பள்ளி சங்கத்தினரும் பள்ளி வளாகத்திற்குள் ஆசிரியரை  தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இந்நிலையில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க கோரி  பள்ளி காலவரையரையின்றி  மூடப்பட்டது.இந்நிலையில் அந்த தனியார்  பள்ளி ஆசிரியரை தாக்கிய ரமேஷ் என்பவரை திருப்போரூர் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.இதனையடுத்து இச்சம்பவத்தை கண்டித்து காலவரையரையின்றி மூடப்பட்ட பள்ளி வியாழக்கிழமை வழக்கம் போல் இயங்கியது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement