Ad Code

Responsive Advertisement

2015-16 பொது பட்ஜெட் தாக்கல்: சிறப்பம்சங்கள்

புதுடெல்லி: மத்திய அரசின்  2015-2016 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை மக்களவையில் நிதியமைச்சர் அருண்ஜெட்லி இன்று தாக்கல் செய்தார். அதன் சிறப்பம்சங்கள் வருமாறு:

* ரூ.ஒரு லட்சம் மதிப்பிற்கு மேல் சொத்து வாங்கினால் பான் கார்டு எண் அவசியம்
*வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றமில்லை

*தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு தற்போதுள்ள ரூ. 2.5 லட்சமே தொடரும். அதில் மாற்றமில்லை


*பான்கார்டு கட்டாயம் தொடரும்

* ஒரு லட்ச ரூபாய்க்கு பொருட்களை வாங்கும்போது பான்கார்டு கட்டாயம் என்பது தொடரும்.

வணிக நிறுவனங்களுக்கான வரிகுறைப்பு

* வணிக நிறுவனங்களுக்கான வரி 25 சதவிகிதமாக குறைக்கப்படும்.

* அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு கார்ப்பரேட் வரி 5 சதவீதமாக குறைக்க படிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* 5 சதவிகித வரி குறைப்பு 4 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும்.

* வணிக நிறுவனங்களுக்கான வரி 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக 4 ஆண்டுகளில் குறைக்கப்படும்.

* கருப்பு பணத்தை ஒழிக்கும் வகையில் நிலையான வரிக்கொள்கை.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை

* தமிழகம், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வரப்படும்.
* அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரித்துள்ளது.

* சரக்கு மற்றும் சேவை வரி முறையை அரசு விரைவில் கொண்டு வர உள்ளது.

* அடுத்த நிதியாண்டில் வளர்ச்சி 8.5 சதவீதம் வரை இருக்கும்.

* இந்தாண்டு இறுதிக்குள் பணவீக்கம் 5 சதவிகிதத்திற்குள் கட்டுப்படுத்தப்படும்.

* அரசின் அனைத்து திட்டங்களும் வறுமை ஒழிப்பை மையமாகக் கொண்டிருக்குதம்.

* அனைவருக்கும் மின்சாரம் மற்றும் சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை



2022ல் அனைவருக்கும் வீடு

* சுதந்திர இந்தியாவின் 75 வது ஆண்டான 2022ம் ஆண்டிற்குள் இந்தியாவிலுள்ள ஒவ்வொரு குடும்பத்தினருக்கும்  வீடு என்ற திட்டத்தை நிறைவேற்ற முயற்சி.

* 5 சதவிகிதத்திற்கு கீழ் சில்லரை விற்பனை பண வீக்கம் நீடிக்கும்.

* வாக்களித்த மக்களின் நம்பிக்கையை பெறும் வகையில் மோடி அரசு செயல்படுகிறது.



6 கோடி கழிவறைகள் அமைக்க திட்டம்

* நடப்பு பற்றாக்குறை 1 சதவிகிதத்திற்கும் குறைவாக உள்ளது.

* மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8 சதவீதமாக உயரும்.

* உலகின் 2வது மிகப்பெரிய பங்குச் சந்தையாக இந்தியா உள்ளது.

* உலகில் வேகமான பொருளாதார வளர்ச்சியை கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது.

* இந்தியாவில் 6 கோடி கழிவறைகள் அமைக்க திட்டம்.

* இதுவரை 50 லட்சம் கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

* இந்தியாவை தூய்மையாக தேசமாக மாற்ற தூய்மை இந்திய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.



 நாட்டின் வளர்ச்சியில் மாநிலங்களின் பங்களிப்பு

* நடப்பு கணக்கு பற்றாக்குறை ஒரு சதவிகிதத்திற்கு கீழ் குறையும்.

* நாட்டின் வளர்ச்சியில் மாநிலங்களின் பங்களிப்பும் இருக்கும்.

* பொருளாதார வளர்ச்சிக்காக 9 மாதங்களில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.



100  நாள் வேலை திட்டம் தொடரும்

* 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் போன்ற திட்டங்கள் தொடரும்.

* மத்திய அரசின் இலக்குக்கள் 75வது சுதந்திர தினத்திற்குள் எட்டப்படும்.

* பொது முதலீட்டை 1.25 லட்சம் கோடியாக அதிகரிக்க நடவடிக்கை

* வடகிழக்கு மாநிலங்கள் பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின்தங்கியுள்ளன.



ஜன் தன் வங்கி கணக்கு சாதனை

* ஜன் தன் வங்கி கணக்கு, நிலக்கரி ஏலத்தில் வெளிப்படை தன்மை மற்றும் தூய்மை இந்தியா ஆகிய முக்கிய 3 திட்டங்களில்  மத்திய அரசு மிகப்பெரிய சாதனை புரிந்துள்ளது.

* வளர்ச்சியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை பட்ஜெட்டில் அறிவிக்க உள்ளேன்.

* சாலை கட்டமைப்பை மேம்படுத்துவது  அரசின் முக்கிய குறிக்கோள்.

* அனைத்து கிராமங்களிலும் தொலைத் தொடர்பு வசதி செய்து தரப்படும்.

* பொருளாதார வளர்ச்சியை கணக்கிட புதிய நடைமுறை உருவாக்கப்படும்.

* உலகின் உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

* 3.9 சதவிதத்துக்குள் நிதிப்பற்றாக்குறையை கட்டுப்படுத்த இலக்கு நிர்ணயம்.

* நிதிப்பற்றாக்குறையைை 4.1 சதவீதமாக பராமரிக்க அரசு உறுதி.



அனைத்து கிராமங்களுக்கும் கல்வி மற்றும் மருத்துவ வசதி


* அனைத்து கிராமங்களுக்கும் கல்வி மற்றும் மருத்துவ வசதிகளை கொண்டு செல்வது அவசியம்.

* வேளாண் வருமானத்தை பெருக்குவது சவாலாக உள்ளது.

* நாட்டின் வளர்ச்சி வட கிழக்கு மாநிலங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும்.

* பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

* மின்சாரம், தூய்மையான குடிநீருக்கு முக்கியத்தும்.



ரூ.12 பிரீமியத்தில் ரூ.2 லட்சம் விபத்து காப்பீடு

* புதிய விபத்து காப்பீட்டுத் திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும்.

* ஆண்டுக்கு 12 ரூபாய் பிரீமியத்தில் ரூ.2 லட்சம் விபத்துக் காப்பீடு திட்டம் கொண்டு வரப்படும்.

* ஏழ்மையில் உள்ள மூத்த குடிமக்களுக்கு உதவ சிறப்பு திட்டங்கள் கொண்டு வரப்படும்.

* அடல் பென்ஷன் திட்டம் உருவாக்கப்படும்.

* 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு பலன் கிடைக்கும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement