தமிழகம் முழுவதும் 1.90 லட்சம் பேர் எழுதிய முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன.
தேர்வு பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பிப்ரவரி 16-ஆம் தேதி முதல் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
உடற்கல்வி இயக்குநர் அளவிலான 27 பணியிடங்களுக்குரிய தேர்வு முடிவுகள் மட்டும் வெளியிடப்படவில்லை.
1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான போட்டித் தேர்வு ஜனவரி 10-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை 1 லட்சத்து 90 ஆயிரத்து 922 பேர் எழுதினர்.
இந்தத் தேர்வுக்கான சரியான விடைகள் ஜனவரி 22-ஆம் தேதி வெளியிடப்பட்டன. இந்த விடைகள் தொடர்பான ஆட்சேபங்களை ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு ஜனவரி 29-ஆம் தேதிக்குள் அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தமிழ், ஆங்கிலம், வரலாறு உள்ளிட்டப் பாடங்களில் சரியான விடைகள் தொடர்பாக பல்வேறு சான்றுகளுடன் தேர்வர்கள் ஆட்சேபங்களை தெரிவித்தனர். இந்த ஆட்சேபங்களை அந்தந்தப் பாடத்துக்கான நிபுணர் குழுக்கள் பரிசீலித்த பிறகு இறுதிசெய்யப்பட்ட சரியான விடைகளுடன் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்பு: இப்போது, 1,790 பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வர்கள் 1:1 என்ற விகிதத்தில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பிப்ரவரி 16-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் தேதி, இடங்கள் குறித்த விவரங்கள் தேர்வர்களுக்கு தனியாகவும், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்திலும் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
நிராகரிப்பு: இந்தத் தேர்வில் பல தேர்வர்கள் தங்களது விடைத்தாளில், வினாத்தாள் எண்ணைக் குறிப்பிடவில்லை. அவ்வாறு வினாத்தாள் எண்ணைக் குறிப்பிடாத தேர்வர்களின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படாமல் நிராகரிக்கப்பட்டதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை