தமிழ்நாடு காவல் துறையில் காலியாக உள்ள 984 காவல் சார்பு ஆய்வாளர் பணிக்கான நேரடி நியமனத்திற்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ளது. இந்தியக் குடியுரிமையுடைய விண்ணப்பதாரர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள் (தாலுகா) பதவிக்கு விண்ணப்பிக்கலாம். இதில் 94 பின்னடைவுக் காலியிடங்களுக்கு காவல் துறையைச் சார்ந்த களப்பணியாளர்கள், அமைச்சுப் பணியாளர்களின் பெண் வாரிசுதாரர்களைக் கொண்டு நிரப்பப்படும்.
சம்பள விவரம்: மதம் ரூ.9,300 -34,800 + தர ஊதியம் ரூ.4,800
வயது வரம்பு: 2015.07.01 தேதியின்படி 20 - 28க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு, உடல்கூறு அளத்தல், உடற்தகுதித் தேர்வு, உடல்திறன் போட்டிகள் மற்றும் நேர்முகத் தேர்வு, சிறப்பு மதிப்பெண்கள் போன்றவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வுக் கட்டணம்: ரூ.230. காவல்துறை விண்ணப்பதாரர்கள், பொதுப்பிரிவு மற்றும் துறைக்கான ஒதுக்கீடு இரண்டிலும் பங்குபெறும் விண்ணப்பித்தால் தேர்வுக் கட்டணமாக ரூ.460 செலுத்த வேண்டும். இதனை இணையதள வங்கி, வங்கி கடன் அட்டை, வங்கி பற்று அட்டைகள் மூலம் செலுத்தலாம். அல்லது அஞ்சலகம் - இந்தியன் வங்கிகள் மூலமும் செலுத்தலாம்.
எழுத்துத் தேர்வு: பொது ஒதுக்கீட்டுக்கான எழுத்துத் தேர்வு 23.05.2015. காவல் துறை ஒதுக்கீட்டுக்கான எழுத்துத் தேர்வு 24.05.2015 ஆம் தேதி நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnusrbexams.net என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.03.2015
மேலும் இட ஒதுக்கீடு, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.tnusrbexams.net என்ற இணையதளத்தை பார்க்கவும்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை