1807 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு ஜனவரி 10ம் தேதி நடைபெற்றது. இத்தேர்விற்கு 2,02,231 நபர்கள் விண்ணபித்திருந்தனர். அதில் 1,90,922 நபர்கள் எழுத்துத் தேர்வு எழுதினர். இதையடுத்து 22.01.2015 அன்று அனைத்து பாடங்களுக்கு விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டு, ஆட்சேபனை இருந்தால் 29.01.2015க்குள் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் முறையிட கேட்டுக் கொள்ளப்பட்டது.
இதையடுத்து இன்று மாலை தேர்ச்சி பட்டியல் வெளியிடப்பட்டு 1:1 என்ற முறையில் சான்றிதழ் சரிப்பார்ப்பிற்கு அழைக்கப்படவுள்ளது. சான்றிதழ் சரிப்பார்ப்பிற்கு இம்மாதம் 16ஆம் தேதி முதல் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சான்றிதழ் சரிப்பார்ப்புக்கான இடம் மற்றும் அழைப்பு கடிதம் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படவுள்ளது. தற்காலிக தேர்ந்தோர் பட்டியலில் மொத்தம் 1946 நபர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை