Ad Code

Responsive Advertisement

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியீடு

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான எழுத்துத் தேர்வை கடந்த 10 ந் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது.சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் இத்தேர்வை எழுதினர்.தேர்வுக்கான சரியான விடையை ஆசிரியர் தேர்வு வாரியம் 2 நாட்களுக்கு முன் வெளியிட்டது.

இந்நிலையில் விடைகள் பற்றிய ஏதேனும் ஆட்சேபணை இருந்தால் வருகிற 29ந் தேக்குள் அதற்கான ஆதாரங்களுடன் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அனுப்பி வைக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


அனைத்து ஆட்சேபணை விண்ணப்பங்களையும் இறுதி நாளன்று பெற்ற பிறகு டிஆர்பி அவர்றை பரிசீலனை செய்யும்.அதன்பிறகு இறுதிவிடைகள் இணையதளத்தில் வெளியிடப்படும். விடைத்தாட்களை சரி செய்வதில் ஏற்படும் பிழைகளைத் தடுக்க ஒவ்வொரு விடைத்தாளும் 2 முறை ஸ்கேன் செய்யப்படும் என்றும் அதன் பிறகு தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என்றும் டிஆர்பி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement