பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு நெருங்கிக் கொண்டிருக்கிறது. மாணவர்கள் தேர்வுக்கு தயாராகிக் கொண்டு இருப்பீர்கள்.
எப்படி படித்தால் தேர்வில் சாதிக்கலாம்?
* படிப்பது மட்டுமே நமது வேலை. மற்றவர்களை போட்டியாக நினைக்கக்கூடாது.
* தேர்வுக்கு இறுதி மூன்று மாதங்கள் கூடுதல் கவனமுடன், சின்னச் சின்ன திட்டமிடல்களுடன் படிக்க வேண்டும்.
* முதன்மைப் பாடங்களில் மட்டும் கவனம் செலுத்தாமல், மொழிப்பாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம்.
* திட்டமிட்டு படித்தலே வெற்றிக்கு அடிப்படை.
* வகுப்பறையில் ஆசிரியர்கள் பாடம் நடத்தும் போது, சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
* தியானப் பயிற்சி செய்வதால் 'டென்ஷன்' குறையும்; ஞாபக சக்தி அதிகரிக்கும்.
* முந்தைய ஆண்டு வினாத்தாள்களுக்கு விடையளித்தும், வரைபடங்களை வரைந்தும் பயிற்சி எடுக்க வேண்டும்.
* ஒவ்வொரு நாளும், வகுப்பறையில் நடத்தும் பாடங்களை திட்டமிட்டு படித்து வீட்டிற்கு வந்ததும் எழுதிப்பார்ப்பது சிறந்தது.
* பிழைகள் இல்லாமல், தெளிவாகவும்; அர்த்தம் மாறாமலும் தேர்வு எழுதப் பழக வேண்டும்.
* மறுநாள் படிக்கலாம் என நினைக்காமல் தினமும் படிக்கவேண்டும். ஒவ்வொரு பாடத்திற்கும் வீட்டில் சுயமாக தேர்வு எழுதி பயிற்சி
பெறவேண்டும்.
* இரவு துாக்கம் வரும்வரை படிக்கலாம். 'டிவி' பார்ப்பதை தவிர்ப்பது நல்லது.
* காய்கறி, பழங்கள் உண்பது மனதையும், உடலையும் புத்துணர்வுடன் வைக்கும்.
* லட்சியத்துடன் படித்தால் தேர்வில் அனைவரும் சாதிக்கலாம்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை