ஆற்றல்சார் கல்லூரித் திட்டத்துக்கான விண்ணப்பங்களைச் சேகரித்து வருகிற பிப்ரவரி 15-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு பல்கலைக்கழகங்களுக்கு, பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.
கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளில் கற்பித்தல் திறனை மேம்படுத்தும் வகையிலும், ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலும் ஆற்றல்சார் கல்லூரித் திட்டத்தை யுஜிசி அறிமுகம் செய்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் கல்லூரிகளுக்கு நிதியுதவிகள் வழங்கப்படும். இதற்கான வழிகாட்டுதல்கள் யுஜிசி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
பல்கலைக்கழகங்கள் அதன் கீழ் இயங்கி வரும் இணைப்புக் கல்லூரிகளிடமிருந்து இதற்கான விண்ணப்பங்களைப் பெற்று, ஆய்வு செய்து தில்லியிலுள்ள யுஜிசி அலுவலகத்துக்கு பிப்ரவரி 15-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
இதற்காக பல்கலைக்கழகங்கள் துணைவேந்தர் தலைமையில் பதிவாளர், கல்லூரி மேம்பாட்டு கவுன்சில் டீன், பல்கலைக்கழகத்துக்கு வெளியிலிருந்து இரண்டு அல்லது மூன்று நிபுணர்களைக் கொண்ட குழுவை அமைத்து கல்லூரிகளின் விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து அனுப்ப வேண்டும் எனவும் யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை