Ad Code

Responsive Advertisement

நேரடி மானியத் திட்டம்: மீண்டும் வாய்ப்பு

சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டத்துக்கு ஏற்கெனவே விண்ணப்பித்தும் வங்கிக் கணக்கு இணைக்கப்படாதவர்கள், எரிவாயு விநியோகஸ்தர்களிடமே வங்கிப் படிவங்களைப் பெற்று மீண்டும் விண்ணப்பிக்கலாம் என எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேரடி மானியத் திட்டத்துக்காக வங்கிகளில் முன்னரே விண்ணப்பித்தும், சில நுகர்வோரின் விண்ணப்பங்கள் வங்கிக் கணக்குடன் இணைக்கப்படவில்லை என புகார்கள் எழுந்தன.

இது குறித்து எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறியது:

ஏற்கெனவே வங்கியில் விண்ணப்பப் படிவங்களை அளித்தும், தற்போது வரை நேரடி மானியத் திட்டத்துக்கு தங்களது வங்கிக் கணக்கு இணைக்கப்படாதவர்கள் மீண்டும் ஒரு முறை எரிவாயு விநியோகஸ்தர்களிடம் தங்களது வங்கிப் படிவங்களை அளித்தால் அவர்களது கணக்கு, உடனடியாக நேரடி மானியத் திட்டத்துடன் இணைக்கப்படும் என தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement