தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளைக் கண்காணிக்க ஏதுவாக மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களைக் கூடுதலாக உருவாக்க வேண்டும் என தலைமையாசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த மாநாட்டில் வலியுறுத்தப்பட்ட முக்கிய கோரிக்கைகள் விவரம்: மாணவ, மாணவிகளுக்கு 14 வகையான நலத்திட்ட உதவிகளை, கற்பித்தல் பணிகள் பாதிக்காமல் வழங்க ஏதுவாக ஒவ்வொரு பள்ளிக்கும் நலத்திட்ட உதவிகள் பெற்று வழங்க ஒரு பணியாளரை நியமிக்க வேண்டும்.
உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும். உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு மட்டும் வழங்கப்படாமல் உள்ள எம்.பில். உயர் படிப்புக்கான ஊக்க ஊதிய உயர்வுக்கான அரசாணையை வெளியிட வேண்டும்.
தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித் துறையைச் சார்ந்த அனைத்துப் பணிகளும், புள்ளி விவரங்களும் கணினிமயமாக்கப்பட்டு இணைய வழி மூலம் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் இணையதள வசதிகளுடன் தேவையான கணினிகளை வழங்க வேண்டும். இந்தப் பணிகளை மேற்கொள்ள முழுநேர கணினி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த மாநாட்டில் வலியுறுத்தப்பட்டன.
இந்த மாநாட்டையொட்டி, தலைமையாசிரியர் சங்கத்தின் மாநில அலுவலகக் கட்டடமும் சென்னை ஊரப்பாக்கத்தில் திறக்கப்பட்டது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை