தேசிய நல்லாசிரியர் விருதுக்கான ஆசிரியர்களை பரிந்துரைக்க, மாவட்டந்தோறும் தேர்வுக்குழு அமைக்க, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.
உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:கல்வி மாவட்டத்துக்கு ஒருவர் வீதம், தேசிய விருதுக்கான ஆசிரியரை தேர்வு செய்ய வேண்டும்; அவர், துாய்மையான கல்வி பணியில் ஈடுபட்டிருக்க வேண்டும்; எவ்வித ஒழுங்கு நடவடிக்கைக்கும் உள்ளாகி இருக்கக் கூடாது.
இதற்கு முன், டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்களை மட்டுமே, தேசிய விருதுக்கு தேர்வு செய்ய வேண்டும். தகுதியான ஆசிரியரை தேர்வு செய்ய, தேர்வுக்குழு அமைக்க வேண்டும். துவக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களை தேர்வு செய்ய, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், தேர்வுக்குழு தலைவராகவும்; மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர், முதுநிலை உதவி தொடக்க கல்வி அலுவலர் என, இரு உறுப்பினர்களும் இருக்க வேண்டும்.
தகுதியான ஆசிரியர்கள் பணிபுரியும் பள்ளிக்கு நேரில் சென்று, ஆய்வு நடத்தி, நடவடிக்கைகளை கவனித்து, இக்குழு மதிப்பிட வேண்டும். முறைகேட்டுக்கு இடமளிக்காமல் செயல்பட வேண்டும்.தேர்வு அறிக்கையை, வரும் 20ம் தேதிக்குள், பள்ளி கல்வி இயக்குனரக இணை இயக்குனருக்கு அனுப்ப வேண்டும்.இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை