Ad Code

Responsive Advertisement

பொங்கல் விடுமுறை எதிரொலி - மின் கட்டணத்தை நாளை வரை அபராதமின்றி செலுத்தலாம்

பொங்கல் விடுமுறையையடுத்து, ஜனவரி 19, 20-ஆம் தேதி வரை அபராதமின்றி மின் கட்டணம் செலுத்தலாம் என, தமிழ்நாடு மின் உற்பத்தி-பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.

ஜனவரி 15,16,17 தேதிகளில் பொங்கல் பண்டிக்கைக்காக மூன்று நாள்கள் தொடர்ந்து விடுமுறை விடப்பட்டது. இந்த மூன்று நாள்களில் மின் கட்டணம் கட்டுவதற்கான கடைசி நாள் இருந்தால், அந்த மின் நுகர்வோருக்கு திங்கள் (ஜன.19), செவ்வாய் (ஜன.20) ஆகிய நாள்களில் அபராதமின்றி மின் கட்டணம் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மூன்று நாள்கள் விடுமுறையாக இருந்ததால் மின் நுகர்வோருக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement