Ad Code

Responsive Advertisement

மொழிப்பாட தேர்வுகளுக்கு கோடு போட்ட விடைத்தாள்

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு மொழிப்பாட தேர்வு களுக்கு, கோடு போட்ட விடைத்தாள் அளிக்க, தேர்வுத் துறை முடிவெடுத்து உள்ளது.

தமிழகத்தில், இந்த ஆண்டு, பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 5ம் தேதி முதல், 31ம் தேதி வரையும்; 10ம் வகுப்பு தேர்வு, மார்ச் 10ம் தேதி முதல், 19ம் தேதி வரையும் நடக்கின்றன. இதில், பிளஸ் 2 தேர்வை, 9 லட்சம் பேர், 10ம் வகுப்பு தேர்வை, 11 லட்சம் பேர் எழுத உள்ளனர். இதனால், கூடுதல் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என தெரிகிறது. இதுகுறித்து, தேர்வுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாதிரி தேர்வுகளின் விடைத்தாள்களை திருத்தம் செய்த போது, கோடு போட்ட விடைத்தாள் அளித்தால், மாணவர்கள் கையெழுத்து சீராக இருக்கும் என, கண்டறியப்பட்டது. இதையடுத்து, மொழிப்பாட தேர்வுகளுக்கு, கோடு போட்ட விடைத்தாள் அளிக்க முடிவெடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement