பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு மொழிப்பாட தேர்வு களுக்கு, கோடு போட்ட விடைத்தாள் அளிக்க, தேர்வுத் துறை முடிவெடுத்து உள்ளது.
தமிழகத்தில், இந்த ஆண்டு, பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 5ம் தேதி முதல், 31ம் தேதி வரையும்; 10ம் வகுப்பு தேர்வு, மார்ச் 10ம் தேதி முதல், 19ம் தேதி வரையும் நடக்கின்றன. இதில், பிளஸ் 2 தேர்வை, 9 லட்சம் பேர், 10ம் வகுப்பு தேர்வை, 11 லட்சம் பேர் எழுத உள்ளனர். இதனால், கூடுதல் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என தெரிகிறது. இதுகுறித்து, தேர்வுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாதிரி தேர்வுகளின் விடைத்தாள்களை திருத்தம் செய்த போது, கோடு போட்ட விடைத்தாள் அளித்தால், மாணவர்கள் கையெழுத்து சீராக இருக்கும் என, கண்டறியப்பட்டது. இதையடுத்து, மொழிப்பாட தேர்வுகளுக்கு, கோடு போட்ட விடைத்தாள் அளிக்க முடிவெடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை