பொறியியல் பட்டதாரி மாணவிகளுக்கென தனி வேலைவாய்ப்பு முகாமை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. உறுப்புக் கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமின்றி, இணைப்புக் கல்லூரி மாணவர்களும் பயன்பெறும் வகையில் மாநில அளவிலான வேலைவாய்ப்பு முகாமை ஒவ்வொரு ஆண்டும் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.
இப்போது சென்னை மண்டலத்துக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை ராஜீவ்காந்தி சாலையில் அமைந்துள்ள அக்னி தொழில்நுட்ப கல்லூரி மையத்தில் திங்கள் (ஜன.5), செவ்வாய்க்கிழமைகளில் பொறியியல் மாணவிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகிகள் கூறியது:
அக்னி தொழில்நுட்ப கல்லூரி மையத்தில் ஜனவரி 5,6 தேதிகளில் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் 1,500 மாணவிகள் வரை பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்களின் வசதிக்காக தாம்பரம், கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் ஆகிய மூன்று பகுதிகளிலிருந்து வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் மையத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்றனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை