பிளஸ் 2 முடிக்காமல் பட்டப் படிப்பு முடித்து, பின் சட்டம் பயின்றவர் வழக்குரைஞராகப் பதிவு செய்யவும், பயிற்சி செய்யவும் சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
பிறகு 2010-ஆம் ஆண்டு மார்ச் மாதம் தவறிய பிளஸ் 2 பாடத்தில் தேர்ச்சி பெற்று, அதே ஆண்டு ஏப்ரல் மாதம் மூன்றாண்டு சட்டப் படிப்பில் சேர்ந்து, 2013-ஆம் ஆண்டு பார் கவுன்சிலில் பதிவு செய்ய முயன்றார்.
அப்போது, பாப்பு துரை பிளஸ் 2 முடிக்காமல் பட்டப்படிப்பு படித்ததாக சட்டப் பல்கலைக்கழகத்துக்கு ஒருவர் கடிதம் அனுப்பினார். அந்தக் கடிதத்தின் அடிப்படையில் விளக்கம் கோரி பல்கலைக்கழகம் பாப்பு துரைக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நோட்டீஸை ரத்து செய்யக் கோரி பாப்பு துரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு முடித்து அதன் பிறகே சட்டப் படிப்பு படிக்க வேண்டும் என விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், மனுதாரர் இந்த சட்ட விதிகளை பின்பற்றியிருக்கவில்லை. இதன் அடிப்படையில் மனுதாரர் வழக்குரைஞராக பயிற்சி செய்ய உரிமை கோர முடியாது. ஆனால், ஏற்கெனவே பட்டப் படிப்பு முடித்து, பிறகு சட்டப் படிப்பு முடித்ததால் அதைப் பயனற்ற காகிதமாக்க விரும்பவில்லை. அதனால், தனியார் நிறுவனம் வேலை வழங்கினால் அதற்கு நான் குறுக்கே நிற்க மாட்டேன்.
ஆனால், இதை வைத்து வழக்குரைஞராகப் பதிவு செய்யவும், நீதிமன்றங்களில் பயிற்சி செய்யவும் உரிமை கோர முடியாது. பல்கலைக்கழகம் அளித்த நோட்டீஸ் ரத்து செய்யப்படுகிறது என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை