பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்க உள்ளதால், ஆசிரியர்கள் விடுப்பு எடுப்பதை தடுக்க தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. விரைவில் இதற்கான சுற்றறிக்கை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பவும் தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்க உள்ளன. முன்னதாக செய்முறைத் தேர்வுகள் தொடங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்வுத் துறை செய்து வருகிறது. இந்நிலையில், பொது தேர்வுகளை குழப்பம் இன்றி நடத்துவது குறித்து தேர்வுத் துறை திட்டமிட்டு வருகிறது. மேலும், பறக்கும் படை அமைத்தல், பாதுகாப்பு ஏற்பாடுகள், மின்சார வசதி உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்பாக ஆய்வுப் பணிகள் நடந்து வருகிறது.
பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுகளில் இந்த ஆண்டு 100 சதவீதம் தேர்ச்சி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப அனைத்து மாவட்ட அதிகாரிகளையும் முடுக்கிவிட்டுள்ளது. மேலும், செய்முறைத் தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில் தேர்வு முடிகின்ற வரை கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் இனி விடுப்பில் செல்ல முடியாது. அவர்கள் வழக்கமான காரணங்களை கூறி விடுமுறை கோர முடியாது. அப்படி வரும் கோரிக்கைகளை நிராகரிக்கவும் கூறப்பட்டுள்ளது. பொதுத்தேர்வில் தவறுகள், குழப்பங்கள் ஏதாவது நடந்தால் சம்பந்தப்பட்ட கல்வி அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது. இதனால், ஆசிரியர்கள் பொதுத் தேர்வு முடியும் வரை விடுப்பில் செல்ல முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை