Ad Code

Responsive Advertisement

தபால்காரர், தபால் காப்பாளர் தேர்வு: இணையதளத்தில் அனுமதிச் சீட்டு வெளியீடு

தபால்காரர், தபால் காப்பாளர் (மெயில் கார்டு) தேர்வுக்கான அனுமதிச் சீட்டு (ஹால் டிக்கெட்) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என தமிழக அஞ்சல் வட்டம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அஞ்சல் வட்டத்தின் தலைமை அஞ்சல் துறைத் தலைவர் டி.மூர்த்தி புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அஞ்சலக கோட்டம், அஞ்சல் பிரிப்பக கோட்டங்களில் 797- தபால்காரர், 9-தபால் காப்பாளர் பணியிடங்களுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழக அஞ்சல் வட்டத்தால், நவம்பர் 15-ஆம் தேதி காலிப் பணியிடங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதற்கான தேர்வு டிசம்பர் 28-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தேர்வு நடைபெறும்.

இந்தத் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு www.dopchennai.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதிலிருந்து தேர்வர்கள் அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வுக்கான இடமும், நேரமும் அனுமதி சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதைத் தேர்வர்கள் சரிபார்த்துக் கொள்ளலாம். எக்காரணம் கொண்டும் தேர்வர்களுக்கு அனுமதிச் சீட்டு அஞ்சல் மூலம் அனுப்பப்பட மாட்டாது என அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement