தொடக்கக் கல்வி டிப்ளமோ படிப்பில் முதலாண்டு, இரண்டாமாண்டு தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை புதன்கிழமை முதல் பெற்றுக்கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மூலம் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை அவரவர் பயின்ற நிறுவனங்களிலேயே பெற்றுக்கொண்டு, தங்களது தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
தனித்தேர்வர்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனங்களில் மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம். விடைத்தாள்களை மறுகூட்டல் செய்ய விரும்பும் மாணவ, மாணவியர்கள் டிசம்பர் 30 முதல் ஜனவரி 5 வரை அந்தந்த மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனத்தில் விண்ணப்பிக்கலாம். மறுகூட்டலுக்கான கட்டணத் தொகையை அவர்கள் நேரிலேயே செலுத்தலாம்.
முதலாமாண்டு, இரண்டாமாண்டு தேர்வெழுதி தோல்வியுற்ற மாணவர்கள் 2015-ஆம் ஆண்டில் தனித் தேர்வர்களாக எழுத ஜனவரி 19 முதல் 24 வரை அந்தந்த மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனங்களில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை