Ad Code

Responsive Advertisement

ஆசிரியர்கள் கருப்புப் பட்டை அணிந்து போராட்டம்

தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி, தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் கருப்புப் பட்டை அணிந்து போராட்டம் நடத்தினர். சென்னை கோடம்பாக்கம் லயோலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் பாஸ்கர், மதுரவாயல் அரசு மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியை லட்சுமி ஆகியோர் தாக்கப்பட்டனர்.

ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி கருப்புப் பட்டை அணிந்துப் போராட உள்ளதாக தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்தது.

இதையடுத்து, மாநிலம் முழுவதும் பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் கருப்புப் பட்டை அணிந்து புதன்கிழமை பணிக்குச் சென்றனர். பள்ளி நேரம் முடிவடைந்த பிறகு, பள்ளிகளுக்கு வெளியே கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன.

இந்தப் போராட்டம் தொடர்பாக தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் தலைவர்

பி.இளங்கோவன் கூறியது:

மாணவர்களை நல்வழிப்படுத்த ஆசிரியர்களுக்கு சுதந்திரம் வேண்டும். ஆசிரியர்கள் மீது புகார்கள் வந்தால் வருவாய் அதிகாரி, கல்வி அதிகாரி, காவல்துறை அதிகாரி கொண்ட குழு முதலில் விசாரணை நடத்த வேண்டும்.

இந்தக் குழுவின் விசாரணைக்குப் பிறகு, சம்பந்தப்பட்ட ஆசிரியர் தவறு செய்திருந்தால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மருத்துவர்களுக்கு உள்ளது போன்று ஆசிரியர்களுக்கும் பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கருப்புப் பட்டை அணிந்து ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர் என்றார் அவர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement