கல்வித் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது அதிமுக ஆட்சி என்று சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் சனிக்கிழமை பேசினார்.
இதில், மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா வினா-விடை புத்தகங்களை வழங்கி தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசியது:
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளின் அடிப்படை வளர்ச்சிக்காகவும், கல்வித் துறைக்காகவும் தமிழக அரசு அதிக அக்கறை செலுத்தி வருகிறது. ஆண்டுதோறும் ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கி, கல்வித் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அதிமுக ஆட்சி.
தில்லியில் நடைபெற்ற மாநில கல்வித் துறை அமைச்சர்கள் மாநாட்டில், கல்வியில் முதன்மை பெற்ற தமிழகத்திற்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது சாதனையாகும்.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக பட்டம் படிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி, சைக்கிள், காலணி, புத்தகங்கள், சீருடைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் அரசு செய்து கொடுக்கிறது. தமிழகம் கல்வித் துறையில் முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது என்றார்.
இதில், பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ,மாணவிகள் வினா-விடை புத்தகங்களை பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக வேண்டும் என மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
இவ்விழாவில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி வாரியத் தலைவர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் சி.மகேந்திரன், எம்எல்ஏ-க்கள் சி.சண்முகவேல், என்.எஸ்.என். நடராஜன், கே.பொன்னுச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை