எட்டயபுரத்தில் மகாகவி பாரதிக்கு மாணவர்கள் கவிதாஞ்சலி செலுத்தினர். கோவில்பட்டி பாரதியார் நினைவு அறக்கட்டளை, ரோட்டரி சங்கம், நேரு யுவகேந்திரா ஆகியன சார்பில் மகாகவி பாரதி பிறந்த நாள் விழா எட்டயபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
பாரதி மணிமண்டபம் முன் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் கண்ணபிரான் தலைமை வகித்தார். மக்கள் தொடர்பு அலுவலர் பாஸ்கரன், எட்டயபுரம் வட்டாட்சியர் செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாரதியார் நினைவு அறக்கட்டளை நிறுவனர் முத்துமுருகன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில், பெண் கல்வி, தேச ஒற்றுமையை வலியுறுத்தும்விதமாக, கையில் தேசியக்கொடியுடன் பாரதி வேடமணிந்த பள்ளி மாணவர், மாணவியர்கள் 200-க்கும் மேற்பட்டோர் உறுதிமொழியேற்றனர். மணிமண்டபத்திலிருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்று, பாரதிக்கு மகாகவி பட்டத்தை வழங்கிய எட்டயபுரம் சமஸ்தான மன்னர் அரண்மனை வளாகத்தைச் சென்றடைந்தனர். அங்கு மாணவர்கள் கவிதை பாடி பாரதிக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதில், எட்டயபுரம் பேரூராட்சித் தலைவர் கோவிந்தராஜபெருமாள், மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் ராபர்ட் ஜேம்ஸ், ரோட்டரி சங்கத் தலைவர் பரமேஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள், எட்டயபுரம் மாரியப்பநாடார் நடுநிலைப் பள்ளி, செங்குந்தர் நடுநிலைப் பள்ளி, தமிழ் பாப்திஸ்து தொடக்கப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பாரதி இல்லக் காப்பாளர் மோகன் நன்றி கூறினார்.

0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை