Ad Code

Responsive Advertisement

மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்தச்தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்

 கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே, மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியர் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ளது டி.கொத்தனூர். இங்குள்ள அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிபவர் அரிபாபு. இவருக்கு மது அருந்தும் பழக்கம் உண்டாம். இவர் அடிக்கடி மது அருந்திவிட்டு பள்ளிக்கு வருவாராம்.

இதுகுறித்து, மாணவர்களின் பெற்றோர் தளி உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பெலிசிட்டாமேரிக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் வியாழக்கிழமை பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

இதில் தலைமை ஆசிரியர் அரிபாபு மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை பணியிடை நீக்கம் செய்து ராஜேந்திரன் உத்தரவிட்டார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement