Ad Code

Responsive Advertisement

உடற்கல்வி ஆசிரியர்களுக்கு 'குத்துச்சண்டை பயிற்சி'

விருதுநகர் அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர்களுக்கு சர்வதேச குத்துச்சண்டை வீரர் பி.ரவிச்சந்திரன் செய்முறை பயிற்சி அளித்தார். குத்து சண்டை, ஸ்குவாஷ், வாள் சண்டை, செஸ், டேக்வாண்டோ, ஜூடோ, கேரம், நீச்சல், பீச் வாலிபால் உட்பட பல விளையாட்டுக்களில் மாணவர்களை ஈடுபடுத்த வேண்டும்.
இதற்கான பயிற்சியை தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்களை கொண்டு வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில், குத்து சண்டையின் போது கவனிக்க வேண்டியவை, அதிக புள்ளிகளுடன் வெற்றி பெற வழி முறை குறித்தும், அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர்களுக்கு சர்வதேச குத்து சண்டை வீரர் பி. ரவிச்சந்திரன் செய்முறை பயிற்சி வழங்கினார். மூன்று நாள் பயிற்சிக்குப்பின் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்று கொடுப்பர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement