மாணவர்கள் மதிப்பெண்கள் பெறுவது மட்டுமே திறமை அல்ல என்பதை அவர்களுக்கு ஆசிரியர்கள் உணர வைக்க வேண்டும் என்று, மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆர்.பிச்சை கூறினார்.
இந்நிலையில், பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற தனியார் பள்ளி மாணவ-மாணவிகள், பள்ளி நிர்வாகங்களுக்கு விருது வழங்கும் விழா கோவையில் சனிக்கிழமை நடைபெற்றது. கோவை மாவட்ட மெட்ரிக் பள்ளிகளின் கல்விக் குழு சார்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் ஏ.ஞானகெளரி முன்னிலை வகித்தார்.
விழாவில் கலந்து கொண்டு தனியார் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கி மெட்ரிக் பள்ளிகளின் இயக்குநர் பேசியது:
கற்பித்தலை பிரதானப் பணியாகக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள், தங்களிடம் பயிலும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்பதை மட்டுமே பிரதானமாகக் கொள்ளாமல், தாம் கற்பிப்பதை மாணவர்கள் கற்றுக் கொள்கின்றனரா என்பதை அறிந்து கொள்வதும் அவசியம். அண்மைக் காலமாக குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் அனைவரும் படித்தவர்களாகவே இருக்கின்றனர். எனவே, மாணவர்களை இந்தச் சமுதாயத்தில் நல்லவர்களாக, வாழ்வதற்கு தகுதி உடையவர்களாக மாற்றுவதுடன் நற்பண்புகள் கொண்டவர்களாகவும் உருவாக்க வேண்டும். வெறும் மதிப்பெண்களைப் பெறுவது மட்டுமே திறமை அல்ல என்பதை மாணவர்களுக்கு உணர்த்த வேண்டும். ஒவ்வொரு மாணவரிடமும் ஓர் உள்ளார்ந்த தனித்திறன் ஒளிந்து கிடக்கும். அதைக் கண்டுபிடித்து மெருகேற்றுவதுடன், நற்பண்பு, ஒழுக்கத்தைக் கற்பித்து கலாசாரத்தை வளர்க்கக் கூடியவர்களாக அவர்களை மாற்ற வேண்டும். இதற்காக அவர்களிடம் ஆசிரியர் என்ற முறையில் அணுகாமல், நண்பர்களாகப் பாவித்து அணுகினால் நல்ல பலன் கிடைக்கும். ஆசிரியர்கள் பாட நூல் அறிவுடன் தற்கால அறிவியல் தொழில்நுட்ப அறிவையும் பெற்றிருக்க வேண்டும் என்றார் அவர்.
மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் (பொறுப்பு) என்.சந்திரன், கல்விக் குழு ஒருங்கிணைப்பாளர் பி.வி.அந்தோணி, செயலர் ஹெச்.ஹாஜா ஷெரீப், பொருளாளர் பி.ஆரோக்கிய தடாயுஸ், பல்வேறு பள்ளிகளின் முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை