Dial *99*99# from your Mobile handset
சமையல் காஸ் மானியம் பெற, வங்கிக்கணக்கு இணைக்கப்பட்டு விட்டதா என்பதை அறிய,பி.எஸ்.என்.எல்., நிறுவனம், இலவச எஸ்.எம்.எஸ்.,சேவையை அறிமுகம் செய்துள்ளது.இச்சேவையை, ஆதார் எண் உள்ளவர்கள் மட்டுமேபயன்படுத்த முடியும்.
காஸ் மானியம் பெற, ஆதார் எண்ணோடு,வங்கிக் கணக்கு எண் அளிக்க வேண்டும். ஆதார்எண் இல்லாதவர்கள், வங்கிக் கணக்கு எண்ணைமட்டும் கொடுக்க வேண்டும். ஜனவரி முதல், இந்தநடைமுறை அமலுக்கு வருவதால், இம்மாதஇறுதிக்குள், ஆதார் எண் அல்லது வங்கிக் கணக்குஎண்ணை, காஸ் முகமை, வங்கியிடம் அளிக்கும்பணி, மும்முரமாக நடக்கிறது. காஸ் முகமைமற்றும் வங்கியில் இந்த விவரங்களை அளித்த பின்,காஸ் மானியம் பெற, வங்கிக் கணக்குஇணைக்கப்பட்டதா என்பதை அறிய, இவலசஎஸ்.எம்.எஸ்., சேவையை, பி.எஸ்.என்.எல்.,அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளர்கள், *99*99# என, மொபைல் போனில் அழுத்தினால், 12இலக்கம் கொண்ட ஆதார் எண் கேட்கும். ஆதார்எண்ணை பதிவு செய்தால், காஸ் மானியம் பெறவங்கிக் கணக்கு எண், இணைக்கப்பட்டு விட்டதாஎன்ற தகவலை அறியலாம்.
எஸ்.பி.ஐ., மறுப்பு:
இதற்கிடையே, காஸ் மானியம் பெற, வங்கிக்கணக்கை இணைக்க, பாரத ஸ்டேட் வங்கி(எஸ்.பி.ஐ.,) வாடிக்கையாளர்களிடம், கட்டணம்வசூலிப்பதாக, புகார் எழுந்தது. இப்புகாரை,வங்கியின் மக்கள் தொடர்பு அலுவலர் செல்வராஜ்மறுத்துள்ளார். இதுகுறித்து, அவர் கூறுகையில், ''வங்கியின் எந்தக் கிளையிலும், காஸ்மானியத்துக்கு, வங்கிக் கணக்கை இணைக்க,கட்டணம் வசூலிப்பதில்லை. கட்டணம் வசூலித்துஇருந்தால், அத்தொகை வாடிக்கையாளர்களுக்கு,திருப்பி அளிக்கப்படும்,'' என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை