அரையாண்டுத் தேர்வு தொடங்கிவிட்ட நிலையில், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, இந்தக் கல்வியாண்டில் ஆசிரியர்களுக்கு பணியிட மாற்றம் வழங்கக் கூடாது என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கூட்டத்தில் இந்த அரசாணை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு விட்டதாக தகவல்கள் தெரிவித்தன.
அலைமோதும் கூட்டம்: இடமாறுதல் கோரி பள்ளிக் கல்வி இயக்ககத்துக்கும், தொடக்கக் கல்வி இயக்ககத்துக்கும் ஏராளமானோர் தினந்தோறும் வருகிறார்கள்.
கல்வியாண்டு தொடங்கி 6 மாதங்களான பிறகும் பல்வேறு காரணங்களுக்காக ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், மாணவர்கள் நலன் கருதி இந்தக் கல்வியாண்டில் ஆசிரியர்களுக்கு இனி இடமாறுதல் இல்லை என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை