Ad Code

Responsive Advertisement

இந்தக் கல்வியாண்டில் ஆசிரியர்களுக்கு இடமாற்றம் இல்லை: அரசு உத்தரவு

அரையாண்டுத் தேர்வு தொடங்கிவிட்ட நிலையில், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, இந்தக் கல்வியாண்டில் ஆசிரியர்களுக்கு பணியிட மாற்றம் வழங்கக் கூடாது என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா இந்த அரசாணையைப் பிறப்பித்துள்ளார்.

சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கூட்டத்தில் இந்த அரசாணை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு விட்டதாக தகவல்கள் தெரிவித்தன.

அலைமோதும் கூட்டம்: இடமாறுதல் கோரி பள்ளிக் கல்வி இயக்ககத்துக்கும், தொடக்கக் கல்வி இயக்ககத்துக்கும் ஏராளமானோர் தினந்தோறும் வருகிறார்கள்.

கல்வியாண்டு தொடங்கி 6 மாதங்களான பிறகும் பல்வேறு காரணங்களுக்காக ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், மாணவர்கள் நலன் கருதி இந்தக் கல்வியாண்டில் ஆசிரியர்களுக்கு இனி இடமாறுதல் இல்லை என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement