ரேஷன் கார்டுக்கு உள்தாள் பெற, குடும்பத்தலைவர் மட்டுமே வர வேண்டும், என்ற உத்தரவால், பொதுமக்கள் அதிருப்தியடைந்தாலும் கூட, அப்போது மட்டுமே போலி ரேஷன் கார்டுகளை கண்டுபிடிக்க முடியும் என்பதில், அதிகாரிகள் உறுதியாக உள்ளனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது: திருப்பூரை பொறுத்தவரை , பெரும்பாலும் கணவன்-மனைவி இருவருமே வேலைக்கு செல்லும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இன்னும் சில வீடுகளில் கணவன் மட்டும் வேலைக்கு செல்கின்றார். திங்கள் முதல் வெள்ளி வரையிலான நாட்களில் மட்டும் உள்தாள் வழங்கப்படுகிறது. விடுபட்டவர்கள், சனிக்கிழமை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.உள்தாள் பெறுவதற்காக வேண்டி, குடும்ப தலைவர் வேலைக்கு லீவு எடுத்துக்கொண்டு, ரேஷன் கடையில் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. கார்டில் போட்டோ இல்லாத, குடும்ப தலைவி உள்தாள் பெற சென்றாலும், உள்தாள் வழங்கப்படுவதில்லை.அரசு அறிவித்துள்ளபடி, 18 வயது பூர்த்தியான குடும்ப உறுப்பினர்கள் வந்தாலும் உள்தாள் வழங்க வேண்டும். தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு தாலுகா பகுதிகளில், கார்டில் போட்டோ இல்லாத குடும்ப தலைவி அல்லது 18 வயது நிரம்பிய உறுப்பினர்கள் சென்றாலும், உள்தாள் வழங்க முடியாது என்று ரேஷன் கடைகளில் திருப்பி அனுப்புகின்றனர்.தொழிலாளர்கள் நலன்கருதி, குடும்ப தலைவர் மட்டுமல்லாது, 18வயது நிரம்பிய உறுப்பினர்களிடமும் உள்தாள்களை ஒப்படைக்கவும் அல்லது ஞாயிற்றுக்கிழமைகளிலும் உள்தாள் வழங்க மேற்கொள்ள, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் செல்வன் கூறுகையில், ""அரசின் உத்தரவுப்படி, ரேஷன் கார்டிலுள்ள குடும்ப தலைவரிடம் மட்டும் உள்தாள் வழங்கப்பட வேண்டும். மேலும், போலி கார்டுதாரர்களையும், போலியாக உள்தாள் பெற்றுச்செல்வதையும் கட்டுப்படுத்தும் வகையில், இத்தகைய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. குடும்ப தலைவர் இறந்திருந்தால்,
கார்டுதாரர்கள் புதிய போட்டோவை மாற்றும் பணிகளை முடிக்க ஏதுவாகவும் இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது,'' என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை