'பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும், தனித்தேர்வர்கள், அறிவியல் பாட செய்முறை தேர்விற்கு பதிவு செய்யாவிட்டால், தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்' என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது. bஇதுகுறித்த, தேர்வுத்துறை அறிவிப்பு:
மார்ச், ஏப்ரலில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும், தனித்தேர்வர்கள், அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்புகளில், தங்கள் பெயரை பதிவு செய்து, பயிற்சி பெற, ஜூன், 11 - 30 மற்றும் அக்., 29 - நவ., 7ம் தேதி வரை, அனுமதி அளிக்கப்பட்டது. அந்த தேதிகளில் பெயர்களை பதிவு செய்யாத தனித்தேர்வர்களும், இ.எஸ்.எல்.சி., தேர்வில் தேர்ச்சி பெற்ற தனித்தேர்வர்களும், 10ம் வகுப்பு தேர்வை எழுத விரும்பினால், இன்று அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் தங்கள் பெயரை பதிவு செய்து பயிற்சி பெறலாம்.
செய்முறை பயிற்சி வகுப்பில் சேருவதற்கு உரிய பள்ளிகள் விவரங் களை, அரசு தேர்வு சேவை மையங்களை அணுகி, தெரிந்து கொள்ளலாம். மேலும், 'www.tndge.in' என்ற இணைய தளத்திலும், முதன்மை கல்வி அலுவலகங்களிலும், தெரிந்து கொள்ளலாம். செய்முறை பயிற்சிக்கு பெயர் பதிவு செய்யாத தனித்தேர்வர்கள், மார்ச், பொதுத்தேர்வுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை