Ad Code

Responsive Advertisement

அறிவியல் செய்முறை தேர்வு:தனி தேர்வர்களுக்கு கண்டிப்பு

'பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும், தனித்தேர்வர்கள், அறிவியல் பாட செய்முறை தேர்விற்கு பதிவு செய்யாவிட்டால், தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்' என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது. bஇதுகுறித்த, தேர்வுத்துறை அறிவிப்பு:

மார்ச், ஏப்ரலில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும், தனித்தேர்வர்கள், அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்புகளில், தங்கள் பெயரை பதிவு செய்து, பயிற்சி பெற, ஜூன், 11 - 30 மற்றும் அக்., 29 - நவ., 7ம் தேதி வரை, அனுமதி அளிக்கப்பட்டது. அந்த தேதிகளில் பெயர்களை பதிவு செய்யாத தனித்தேர்வர்களும், இ.எஸ்.எல்.சி., தேர்வில் தேர்ச்சி பெற்ற தனித்தேர்வர்களும், 10ம் வகுப்பு தேர்வை எழுத விரும்பினால், இன்று அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் தங்கள் பெயரை பதிவு செய்து பயிற்சி பெறலாம்.

செய்முறை பயிற்சி வகுப்பில் சேருவதற்கு உரிய பள்ளிகள் விவரங் களை, அரசு தேர்வு சேவை மையங்களை அணுகி, தெரிந்து கொள்ளலாம். மேலும், 'www.tndge.in' என்ற இணைய தளத்திலும், முதன்மை கல்வி அலுவலகங்களிலும், தெரிந்து கொள்ளலாம். செய்முறை பயிற்சிக்கு பெயர் பதிவு செய்யாத தனித்தேர்வர்கள், மார்ச், பொதுத்தேர்வுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement